Published : 06 Jul 2016 10:57 AM
Last Updated : 06 Jul 2016 10:57 AM

வேலைநிறுத்தம் வாபஸ் இல்லை: எஸ்ஆர்இஎஸ் உறுதி

7-வது ஊதியக் குழுவில் 23 சதவீதம் ஊதிய உயர்வு என்பது அப்பட்டமான பொய் எனவும், ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 11-ம் தேதி வேலைநிறுத்தம் நிச்சயம் நடைபெறும் என்றும் எஸ்ஆர்இஎஸ் பொதுச் செயலாளர் சூர்யபிரகாசம் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது: 4, 5, 6-வது ஊதியக் குழுக்களில் முறையே 27, 31, 54 சதவீதம் ஊதிய உயர்வு கிடைத்தது. ஆனால், 7-வது ஊதியக் குழுவில் 14 சத வீத ஊதிய உயர்வு மட்டும்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 சத வீதம் என்பது அப்பட்டமான பொய். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்க வேண்டும்.இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் கடந்த மாதம் 30-ம் தேதி போராட்டக் குழு அமைப்பாளரும் எஸ்ஆர்எம்யு அமைப்பைச் சேர்ந்த அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சிவகோபால் மிஸ்ரா குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தச் சூழலில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணைய்யா தன்னிச்சையாக அறிவித்தது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 11-ம் தேதி வேலைநிறுத்தம் நிச்சயமாக நடைபெறும் என்றார்.

சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழி யன், பார்த்திபன், தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x