Published : 12 Jun 2017 09:22 AM
Last Updated : 12 Jun 2017 09:22 AM
‘அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளது. கட்சியில் உள்ள குழப்பத்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது’’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
நாகர்கோவிலில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத் துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள் ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்பது முதல்வரின் கையில்தான் உள்ளது. அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளது. கட்சியில் உள்ள குழப்பத்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது.
அதிமுகவை பாஜக இயக்குவ தாக ஸ்டாலின் கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தமிழக அரசை பாஜகவின் பினாமி அரசு என்று கூறுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ கத்தில் ஆரோக்கியமான எதிர்க் கட்சியாக பாஜக செயல்படுகிறது. முறையான எதிர்க்கட்சியாக திமுக செயல்படவில்லை. அதிமுகவை எதிர்ப்பதைவிட பாஜகவைத்தான் ஸ்டாலின் அதிகம் எதிர்க்கிறார்.
தமிழகத்தில் கட்சி ரீதியாக அதிமுகவை பாஜக எதிர்க்கிறது. ஆனால் ஆட்சி ரீதியாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருகிறது.
சசிகலாவை சந்திப்பது தவறு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடம் குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை முதல்வரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும்தான் முடிவு செய்ய வேண்டும். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் சென்று சந்திப்பது தவறானது என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT