Published : 21 Sep 2016 09:11 AM
Last Updated : 21 Sep 2016 09:11 AM

உள்ளாட்சித் தேர்தல்: பாமகவில் இன்று விருப்ப மனு

உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர் கள் இன்று முதல் விருப்ப மனுக் களை அளிக்கலாம் என அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் செப்டம்பர் 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தியாக ராய நகரில் உள்ள பாமக அலுவல கத்தில் காலை 11 மணி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம். நானும் (ஜி.கே.மணி), மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி யும் விருப்ப மனுக்களைப் பெற இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x