Published : 03 Feb 2014 08:00 AM
Last Updated : 03 Feb 2014 08:00 AM

ஜெயேந்திரருக்கு திடீர் உடல்நலக் குறைவு

நெல்லூர் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டார்.

நெல்லூர் அருகே சென்றபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

பின்னர், ஜெயேந்திரருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திங்கள்கிழமை நெல்லூரில் இருந்து சென்னைக்கு அவரை அழைத்து வரப்போவதாக காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x