Published : 29 Jan 2014 01:41 PM
Last Updated : 29 Jan 2014 01:41 PM

அமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் நின்றிருந்த காரின் அடியில் பைப் வெடிகுண்டு புதன்கிழமை காலை சிக்கியது.

புதன்கிழமை காலையில் புதுச்சேரியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு வந்த உதவியாளர் வீட்டின் முன்பு நின்றிருந்த காரின் அடியில் மர்மப் பொருள் கிடப்பதை பார்த்து, காவல்நிலையத்துக்குத் தகவல் தந்தார். காரின் அடியில் 3 அங்குலம் அகலம், ஒன்றரை அடி உயரமுள்ள பைப் வெடிகுண்டு போல் கிடந்த பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் எடுத்துச்சென்று, குழி தோண்டி வைத்து அதன்மேல் மணல் மூட்டைகள் அடுக்கினர்.

வெடி பொருளை செயலிழக்க வைக்க சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். அந்த பைப் வெடிகுண்டு மாலை 7.45 மணிக்கு 6 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழுவால் செயலிழக்கச் செய்யப்பட்டது. அதில் 21 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், எலெக்ட்ரிக் அல்லாத டெட்டனேட் டர்கள் 11 மற்றும் 1 கிலோ ஜெல்லெக்ஸ் உள்ளிட்ட வெடி மருந்துகள் இருந்தன என்று வெடி குண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். அந்த பைப் வெடிகுண்டின் மொத்த எடை 2 கிலோ இருந்தது.

நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலை மையில் கட்சி நிர்வாகிகள் மறிய லில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன.

இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: மத்திய அமைச்சர் வீட்டில் கைப்பற்றிய வெடிகுண்டு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போது விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x