

தமாகாவில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் ஞானசேகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமாகா துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வேலூர் ஞானசேகரன் நீக்கம் செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஞானசேகரன் அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் மீது இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தமாகா நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய முடிவு செய்திருப்பதாக ஞானசேகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை ஞானசேகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை போயஸ்கார்டனில் சந்தித்தார். அதன் பிறகு அதிமுகவில் இணைந்தார்.
தமாகா மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக, காங்கிரஸ் மற்றும் திமுகவில் இணைந்து வருவது தமாகாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.