Published : 06 Apr 2014 10:00 AM
Last Updated : 06 Apr 2014 10:00 AM

கருத்துக் கணிப்புக்கு நாளை முதல் தடை

மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதையடுத்து, நாளையிலிருந்து கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

16-வது மக்களவைத் தேர்தல், நாளை (திங்கள்கிழமை) முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு அசாம், திரிபுராவில் நாளை நடக்கிறது. இதையடுத்து, நாளை காலை 7 மணி முதல் மே 12-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தேர்தல் குறித்த முடிவுகள், கருத்துக் கணிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் மின்னணு ஊடகத்தில் வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, ஆந்திரம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், சில மாநிலங்களில் நடக்கும் இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கும் இந்தத் தடை பொருந்தும். தமிழகத்தில் ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்கும் இது பொருந்தும். இந்தத் தகவல்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x