Published : 07 Mar 2017 12:27 PM
Last Updated : 07 Mar 2017 12:27 PM

பல ஆண்டுகளுக்கு பின் சிடி கடைகளில் போலீஸார் சோதனை

பல ஆண்டுகளுக்கு பிறகு சிடி கடைகளில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். எந்த கடைகளிலும் புதுப்பட சிடி கிடைக்காமல் திரும்பினர்.

புதுச்சேரியில் ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ணாசாலை பகுதிகளில் திரைப்பட சிடிக்கள் விற்பனை நடக்கிறது. போலீஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணாசாலை குபேர் பஜார் கடைகளில் போலீஸார் நேற்று திடீரென்று சோதனை மேற்கொண்டனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்த போதும் புதிய திரைப்படங்கள் ஏதும் சிக்கவில்லை.

புதுச்சேரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு சிடி கடைகளில் சோதனை நடந்ததை வாடிக்கையாளர்கள் பலரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

போலீஸ் தரப்பில் திடீர் சோதனை தொடர்பாக கேட்டதற்கு, “குபேர் பஜார் கடைகளில் ஆபாச பட சிடிக்கள், புதிய படங்கள் விற்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் சோதனை செய்தோம். கடைகளில் ஏதும் கிடைக்கவில்லை. புதிய படங்கள், ஆபாச சிடிக்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சோதனை அடிக்கடி நடக்கும்” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x