Published : 30 Jun 2017 10:00 AM
Last Updated : 30 Jun 2017 10:00 AM
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மல்லிகார்ஜுனன். இவரது மனைவி பவித்ரா(23), கடந்த 20-ம் தேதி பிரசவத்துக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 22-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ மனையில் குழந்தைகள் வார்டில் பவித்ரா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை பவித்ரா தனது குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க எடுத்துச் செல்ல முயன் றார். அப்போது, அதே வார்டில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், குழந்தையை தான் மருத்துவரிடம் காண்பிப்பதாகக் கூறி, குழந்தையை வாங்கிச் சென்றார்.
நீண்ட நேரமாகியும் அப்பெண் வராததால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா மருத்துவமனை ஊழியர் களிடம் தெரிவித்தார். மருத்துவ மனை முழுவதும் தேடியும் அந்த பெண்ணை காணவில்லை. இதை யடுத்து, மேட்டூர் காவல் நிலை யத்தில் பவித்ரா புகார் செய்தார்.
மருத்துவமனையில் அந்த பெண் கொடுத்த முகவரி மற்றும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT