Published : 02 Sep 2016 09:38 AM
Last Updated : 02 Sep 2016 09:38 AM

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர் களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தை தொடங்கியுள் ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டு களாக இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 114 படகுகளை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தை நேற்று தொடங் கினர்.

இதனால் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல் லாமல் ஆழமற்ற பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர் களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தினமும் குறைந்தது 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x