Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

பிப்.13-ல் சட்டமன்றம் கூடும் நேரத்தில் மாற்றம்

வரும் 13-ம் தேதியன்று, தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்குப் பதிலாக முற்பகல் 11 மணி அளவில் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை வரும் 13-ம் தேதி, காலை 10 மணிக்குப் பதிலாக முற்பகல் 11 மணிக்குக் கூடும் என்று பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(2)-ன் கீழ் ஆணையிட்டுள்ளார்.

அப்போது 2014-15-ம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x