Published : 05 Jul 2016 07:40 AM
Last Updated : 05 Jul 2016 07:40 AM

முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறை: மத்திய அரசின் குரூப்-பி, சி பிரிவு பணி தேர்வில் அதிரடி மாற்றம்

3-வது நிலை தேர்வில் விரிவாக பதில் எழுத வேண்டும்

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான போட்டித்தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முதல்முறை யாக ஆன்லைன் (கணினி வழி) தேர்வுமுறை அறிமுகப்படுத்தப் படுகிறது. அதோடு புதிதாக சேர்க் கப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் கேள்விகளுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறை களில் உதவியாளர், மத்திய அமைச்சரவை உதவி பிரிவு அதிகாரி, வருமானவரி ஆய்வாளர், மத்திய கலால் வரி ஆய்வாளர், கடத்தல் தடுப்பு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், உதவி தணிக்கை அதிகாரி,தணிக்கையாளர், புள்ளியியல் ஆய்வாளர், அஞ்சலக ஆய்வாளர், வரி உதவியாளர், இளநிலை கணக்காளர், உள்ளிட்ட மத்திய அரசின் குரூப்-பி அதிகாரிகளும், குரூப்-சி பணியாளர்களும் பணியாளர் தேர்வாணையத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) ஒருங் கிணைந்த பட்டப் படிப்பு நிலை தேர்வுகள் மூலமாக தேர்வுசெய்யப் படுகிறார்கள். மத்திய அரசின் சார்நிலைப் பணிகளுக்காக நடத் தப்படும் இந்தத் தேர்வை பட்டதாரிகள் எழுதலாம்

குரூப்-பி, சி தேர்வில் மாற்றம்

கடந்த ஆண்டு வரை, நிலை-1, நிலை-2 என்ற இரு தேர்வுகளும், குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் நேர்முகத்தேர்வும், திறன் தேர்வும் இருந்தன. இந்த ஆண்டு முதல் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக் கான குரூப்-பி, குரூப்-சி போட்டித் தேர்வில் பணியாளர் தேர் வாணையம் பல்வேறு மாற் றங்களை கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து பணியாளர் தேர் வாணைத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி “தி இந்து”விடம் கூறியதாவது:-

புதிய தேர்வுமுறையில் முன் பிருந்த பேனா-வழி தேர்வுமுறை நீக்கப்பட்டு கணினிவழித் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 3 நிலைகளில் தேர்வு அமைந்திருக்கும். முதல் இரண்டு நிலை தேர்வுகளும் கணினிவழியில் மட்டுமே நடத்தப்படும். முதல் நிலை தேர்வில் பொது விழிப்புத்திறன் மற்றும் பகுத்தாராயும் திறன், பொது அறிவு, கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் தலா 25 கேள்விகள் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண்.

இதில் வெற்றிபெறுவோர் 2-ம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதுவும் கணினிவழியில் நடை பெறும். முதல் இரு நிலை தேர்வு களில் வினாக்களுக்கு தவறாக விடையளித்தால் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் அரை மதிப் பெண் கழிக்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 3-வது நிலை தேர் வில் ஆங்கிலம் அல்லது இந்தி யில் விரிவாக பதில் எழுத வேண்டும். கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல், விண்ணப்பம் எழுதுதல் ஆகியவற்றில் 100 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்பார்கள். குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் 4-வது நிலையில் திறன்தேர்வு நடத்தப் படும். முதல் நிலை, 2-ம் நிலை, 3-வது நிலை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் வெவ் வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்தபடி, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. இவ்வாறு கருப்பசாமி கூறினார்.

மேற்குறிப்பிட்ட பல்வேறு பணிகளில் 2016-ம் ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்பும் வகை யில் முதல் நிலை தேர்வானது ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் கணினிவழியில் பல்வேறு கட்டங் களாக நடத்தப்பட இருக்கி றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் இத்தேர்வெழுத 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அகில இந்திய அளவில் 33 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

விளக்கம்

ஆகஸ்ட் மாதம் நடைபெற வுள்ள ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு நிலை தேர்வுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 லட்சத்து 39 ஆயிரம் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க முடிய வில்லை என்று ஒருசிலர் புகார் தெரிவித்தனர்.

பிரிண்ட் அவுட்

இதுகுறித்து பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குநர் கருப்பசாமி யிடம் கேட்டபோது, “பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கும் ஆன் லைனில் மட்டும்தான் விண்ணப் பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப் பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி வரையில் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுக்கலாம். அதன்பிறகு பிரிண்ட் அவுட் எடுக்க முடியாது. அந்த வகையில், தற்போதைய தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த மார்ச் 14-ம் தேதி ஆகும். எனவே, அந்த தேதி வரைதான் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க முடியும். தற்போது விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை மட்டும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x