Published : 11 Jan 2017 08:00 AM
Last Updated : 11 Jan 2017 08:00 AM
சென்னையின் குடிநீர் தேவைக் காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர் வரும் 16-ம் தேதி தமிழக எல்லைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு கங்கை ஒப்பந்தப் படி ஒவ்வொரு ஆண்டும் 2 கட்டங் களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுகிறது. அணைகளில் போதிய நீர் இல்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஆந்திர அரசு தண்ணீரை திறந்துவிட வில்லை. எனினும், கடந்த ஆண்டு அக்.10-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வார்தா புயல் காரணமாக டிச.11-ம் தேதி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார்.
அதன் விளைவாக, சென்னை யின் குடிநீர் தேவைக்காக நேற்று முன்தினம் பிற்பகலில் தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே விநாடிக்கு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப் பட்டது.கண்டலேறு அணையில் இருந்து 152 கி.மீ. தூரத்தில், தமிழக எல்லையில் உள்ள தாமரைக் குப்பம் ஜீரோ பாயிண் டுக்கு வரும் 16-ம் தேதி கிருஷ்ணா நீர் வந்தடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT