Published : 20 Apr 2017 08:49 AM
Last Updated : 20 Apr 2017 08:49 AM

இலங்கை மீனவர்கள் 7 பேர் விடுதலை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 6-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி விசைப்படகில் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 7 மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

அதன்பின் படகையும் மீனவர்களையும் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மெரைன் போலீஸில் ஒப்படைத்தனர். அவர் களை கடந்த 7-ம் தேதி ராமநாத புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஏப்ரல் 20-ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மத்திய அரசு இலங்கை மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் மூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. ராமநாதபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் இன்பகார்த்திக், நல்லெண்ண அடிப்படையில் இலங்கை மீனவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட தூத்துக்குடி போலீஸார், சென்னை புழல் சிறையில் உள்ள மீனவர்களை இன்று விடுவித்து, அதன் பின்னர் தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x