Published : 28 Jul 2016 09:03 AM
Last Updated : 28 Jul 2016 09:03 AM

மத்திய அரசு வரிப் பங்கில் வித்தியாசம் ஏன்? - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

மத்திய அரசு அளிக்கும் வரிப்பங்கில் ஆண்டுதோறும் ஏற்ற, இறக்கம் இருக்கும். அதனால்தான் வித்தியாசம் காணப்படுகிறது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அவர் கூறியதாவது:

திமுக உறுப்பினர் கே.என்.நேரு, கொறடா அர.சக்கரபாணி ஆகி யோர் பேசும்போது, ‘கடந்த 2006 -11ம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டில் குறிப்பிட்ட தொகை அடிப்படையில், இந்த ஆண்டுக் கான மத்திய வரிகளில் மாநில அர சின் பங்குத்தொகை ரூ.23,018.12 கோடியாக இருக்கிறது. ஆனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவையில் பதிலளிக்கும்போது, இந்த ஆண்டு சராசரியாக ரூ.35,854.60 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளாரே. இதில் வித்தி யாசம் இருப்பது ஏன்?’ என கேட்டுள்ளனர்.

மத்திய வரிகளின் பங்கை மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கும்போது, 5 ஆண்டுகளில் மத்திய அரசின் வரி வருவாய் கூடும் என கணக்கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு என்ன வரும் என கணக்கிட்டு வழங்குவது வழக்கம். அந்த வகையில் 13-வது நிதிக்குழு காலத்தில் 2010 முதல் 2015 வரை 5 ஆண்டுகளுக்கு தமிழகம் பெற்ற தொகை ரூ.80,943 கோடி. கடந்த 2014-15 நிதியாண்டில் தமிழகம் பெற்றது ரூ.16,189 கோடி. தற்போது 14-வது நிதிக்குழு 2015-ல் அமைக்கப்பட்டுள்ளது. இது, 2020 வரை ஐந்தாண்டுக்கு இருக்கும். இக்காலத்தில் மத்திய வரி வருவாய் கூடும் என்ற கணக்கில் ரூ.1 கோடியே 79 லட்சத்து 273 கோடி என கணக்கிட்டு, ஆண்டுக்கு ரூ.35,854.60 கோடி வரும் என அவர் (அருண் ஜேட்லி) தெரிவித்துள்ளார்.

2016-17 நிதியாண்டில் மத்திய பட்ஜெட் திட்ட அலுவலக கணக்குப்படி நாம் பெற இருக்கும் தொகை ரூ.23,018 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 3 ஆண்டுகளில் இத்தொகை கூடும் அல்லது குறையும். அதில் வரி வசூல் எவ்வளவு இருக்கும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர். மத்திய நிதிக்குழு, சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் தருவதில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாம் பட்ஜெட்டில் கூறியிருப்பதும், அவர் (அருண்ஜேட்லி) கூறியிருப்பதும் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x