Published : 20 Feb 2017 02:35 PM
Last Updated : 20 Feb 2017 02:35 PM

தஞ்சையில் தலித் பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது

தஞ்சாவூரில் தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், "கடந்த வெள்ளிக்கிழமையன்று பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் தன்னுடைய கிராமத்துக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கட்டிடத் தொழிலாளியான பி.ஆனந்த், அவரை ஊரில் விட்டுவிடுவதாகக் கூறித் தன் வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

பின்னர் அந்தப் பெண்ணை தனிமையான இடத்துக்குக் கடத்திச் சென்ற ஆனந்த், அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தைத் தன் குடும்பத்திடம் சொல்ல, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 506 I (கொலை மிரட்டல்) மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தைக் கைது செய்தது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x