Published : 21 Jun 2017 04:08 PM
Last Updated : 21 Jun 2017 04:08 PM

கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம்

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தமிழக அரசு அனைத்துவிதமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் (பழனி) கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. எனவே கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு காயச்சல் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலை கண்டறிவதற்கான பரிசோதனை வசதிகள் உள்ளன.

குறும்படங்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவை மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அனைத்துவிதமாக தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x