Published : 14 Jun 2017 03:27 PM
Last Updated : 14 Jun 2017 03:27 PM

ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி தொடங்க மத்திய அரசு அனுமதி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிகிச்சை மருத்துவமனையில் ரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்த தான முகாமை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''தமிழகத்தில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பயனடையும்.

மெட்ரோ ரத்த வங்கி அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் மெட்ரோ ரத்த வங்கி தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x