Published : 07 Jun 2016 10:13 AM
Last Updated : 07 Jun 2016 10:13 AM

தருமபுரி நகை வியாபாரிகளிடம் 4 கிலோ நகை கொள்ளை

தருமபுரி துரைசாமி நாயுடு தெரு வில் சிவக்குமார், கோபி ஆகி யோர் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு கடையை அடைத்துவிட்டு இருசக்கர வாக னத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

அந்த தெருவில் உள்ள ஒரு கண் மருத்துவமனை முன்பாக அவர்களை மர்ம நபர்கள் வழி மறித்து, மிளகாய்ப் பொடியை சிவகுமார், கோபி முகத்தில் தூவினர். அவர்களிடம் இருந்த சுமார் 4 கிலோ நகைகள், ரூ.2.25 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில், ஸ்டாலின் என்ற ஒரு நபர் மட்டும் சிக்கினார்.

இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாருக்கு தகவல் அளித்த வர்கள், வழிப்பறி செய்து நகை, பணத்தை பறித்துச் சென்ற வர்கள் நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான் என்றும் போலீ ஸாரிடம் கூறினர்.

பொதுமக்களிடம் சிக்கிய ஸ்டாலினை காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில் மேலும் சிலரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x