Published : 05 May 2017 09:46 AM
Last Updated : 05 May 2017 09:46 AM

அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் 2-வது நாளாக அறுவை சிகிச்சைகள் பாதிப்பு: இரு வாரங்களுக்கும் மேலாக தொடரும் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டத்தால் நேற்று 2-வது நாளாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் கடந்த 19-ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்

இந்நிலையில் தமிழகம் முழு வதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் நேற்று முன்தினம் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை கள், மருத்துவ சேவைகள், மருத் துவ முகாம்கள் உள்ளிட்டவற்றை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்படவிருந்த ஆயிரக் கணக்கான அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும் செயல்படாது என்று மருத்துவர்கள் எச்சரித் திருந்தனர்.

ஆனால் அரசு மருத்துவமனை களில் சுழற்சி முறையில் நேற்று பணியாற்றிய மருத்துவர்கள் அவசரமாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகளை மட்டும் செய்தனர். மற்ற அறுவை சிகிச்சை களை நிறுத்தி வைத்தனர். புற நோயாளிகள் பிரிவிலும் மருத்து வர்கள் சுழற்சி முறையில் நோயாளி களுக்கு சிகிச்சை அளித் தனர். மருத்துவர்களின் போராட் டத்தால் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பாதிக்கப்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனையில் போராடிய தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்த்த மருத்துவர்கள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறும்போது, “நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் சுழற்சி முறை யில் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளோம். இந்த கல்லூரியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ஆனால் சுமார் 700 பேர் வரை மட்டுமே போராட்டம் நடத்துகிறோம்” என்றனர்.

சென்னை மருத்துவ சேவை கள் இயக்ககத்தில், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத் தினர் நேற்று சமாதி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது மருத்துவர் ஒருவருக்கு உயிருடன் சமாதி கட்டுவது போல சுற்றிலும் செங்கல் மற்றும் சிமென்ட்டால் சுவர் எழுப்பினர்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில செயலாளர் கதிர்வேல் கூறும்போது, “தற்போது தமிழகத்தில் அவசர சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அவசரமில்லா அறுவை சிகிச்சை கள் மட்டுமே ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை யில் சுமார் 30 ஆண்டுகளாக பின்பற்றிவரும் நடைமுறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்படவிருந்த ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும் செயல்படாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x