Published : 18 May 2017 07:57 AM
Last Updated : 18 May 2017 07:57 AM

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழர்? - பிரதமரை நாளை சந்திக்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன்

குடியரசுத் தலைவர் வேட்பாள ராக தமிழகத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதனை அறிவிக்க வேளாண் வல்லுநர் பேரவை வலியுறுத்தியுள்ள சூழலில், அவர் நாளை பிரதமரைச் சந்திக்கிறார்.

தற்போதைய குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியர சுத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா ஸ்வராஜ், அண்ணா ஹசாரே உள் ளிட்ட பலரது பெயர்கள் அடிபடு கின்றன.

அதேபோல காங்கிரஸ் சார் பில் குடியரசு துணைத் தலை வர் ஹமீது அன்சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி உள்ளிட்டோ ரில் ஒருவர் பெயர் முன்மொழி யப்படலாம் என்கிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவரும், பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான எம்.எஸ்.சுவாமிநாதனை குடிய ரசுத் தலைவர் வேட்பாளராக அறி விக்குமாறு தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை (தமிழ் நாடு சீனியர் அக்ரோ டெக்னா லஜிஸ்ட் ஃபோரம்) மற்றும் தமிழ் நாடு அரசு வேளாண் பட்டதாரிகள் சங்கம் ஆகியவை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து அதன் நிர்வாகி அக்ரி கணேசனிடம் பேசியபோது, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் ஆதரவு தரத் தயாராக இருக்கின்றனர். தமிழக அரசின் ஆதரவைப் பெறும் திட்டமும் உள்ளது.

இந்நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) தன்னைச் சந்திக்க எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளார். நல்ல அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இதுகுறித்து எம்.எஸ்.சுவாமி நாதனின் நேரடி உதவியாளர் டாக்டர் ராமனிடம் கேட்டபோது, “பிரதமருக்கு அனுப்பிய அந்த முன்மொழிவை எங்களுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். நாங்கள் அதை மறுக்கவில்லை. ஆனால், நாளை பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு இதற்கென திட்டமிடப்பட்டதல்ல. தான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருமாறு பிரதமரை அழைக்கவே எம்.எஸ்.சுவாமிநாதன் டெல்லி செல்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x