Published : 22 Jul 2016 07:12 AM
Last Updated : 22 Jul 2016 07:12 AM
தமிழக அரசின் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடனை சமாளிப்பது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவை வளாகத்தில் நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பால் உற்பத்தியா ளர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து எந்த அறிவிப்பு களும் இல்லாதது வேதனை அளிக்கிறது.
கடந்த 2011-ல் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கிரிமினல்கள், சமூக விரோதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இதன்மூ லம் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம் என அறிவித்திருந்தார். ஆனால், அதிமுக 2-வது முறையாக ஆட்சி அமைத்த 2 மாதங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.
காவல் துறைக்கு சுதந்திரம் அளிக்கப்படும் என கடந்த பட்ஜட்டில் அறிவித்தனர். ஆனால், இப்போது காவல் துறை அதிமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது.
விவசாயிகளின் தனிநபர் வருமானம் மும்மடங்கு உயர்த்தப்படும் என உறுதிமொழி அளித்தார்கள். ஆனால், விவ சாயிகள் தற்கொலை செய்திகள் தான் வந்து கொண்டிருக்கிறது.
மோனோ ரயில் திட்டம், முதியோருக்கு தங்கும் விடுதி, சென்னை டிபிஐ வளாகத்தில் அறிவுசார் பூங்கா, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள் ளளவை அதிகரிக்க ரூ.1,851 கோடியில் திட்டம் போன்ற திட் டங்கள் வெறும் அறிவிப்புக ளாகவே இருக்கின்றன.
5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவோம் எனக் கூறி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததும் அரசின் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தக் கடனை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்கு எந்த விளக்கங்களும் பட்ஜெட்டில் இல்லை. மொத்தத்தில் அதிமுக அரசின் இந்த பட்ஜெட் வெற்று வேட்டு அறிக்கையாக உள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT