Published : 21 Feb 2017 09:34 AM
Last Updated : 21 Feb 2017 09:34 AM
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டை (தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.
கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் உள்ளார். இவர், நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் உள்ள ஆறுமுகம் வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர். அப்போது அங்கு ஆறுமுகம் இருந்துள்ளார். எனினும், யாருக்கும் காயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT