Published : 06 Sep 2014 12:11 PM
Last Updated : 06 Sep 2014 12:11 PM

மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் கொள்ளை

கோவை அருகே தனியார் நிறுவன கணக்காளரின் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே செய்து ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக் கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அன்னூர் பகுதியில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் கணக்காளராகப் பணிபுரிபவர் பழனியப்பன்.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பழனியப் பனிடம் வெள்ளிக்கிழமை காலை ரூ.30 லட்சத்தை சின்னதுரை வழங்கியுள்ளார். அதை அவர் பெற்றுக்கொண்டு வீட்டின் நுழைவு வாயில் அருகே வந்தபோது உள்ளே நுழைந்த ஒரு இளைஞர் பழனியப்பனின் முகத்தில் மிளகாய் பொடியை ஸ்பிரே செய்து பணத்தை கொள்ளை யடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கி ளுடன் காத்திருந்தவருடன் கொள்ளையடித்தவர் தப்பிச்சென்றார். இது குறித்து போலீஸில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x