Published : 28 Jun 2019 12:12 PM
Last Updated : 28 Jun 2019 12:12 PM

தீ விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தீ விபத்தில் தாய் மற்றும் மனைவியுடன் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் நேற்று குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ  விபத்தில் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

பிரசன்னா, அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x