Published : 22 Sep 2018 08:28 AM
Last Updated : 22 Sep 2018 08:28 AM

பல காவல் நிலையங்களில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு 

கடலூர் ராஜகோபாலசாமி கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் நேற்று அளித்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது, பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், பெண்களுக்கு அவமரியாதை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிள்ளை திமுக நிர்வாகி ரவீந்திரன் கிள்ளை காவல்நி லையத்தில் நேற்று முன்தினம் அளித்த மனுவில், ‘‘கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக மகளிரணி அணி செயலாளர் கனிமொழி எம்.பி குறித்து தரக் குறைவாக பதிவிட்டிருந்தார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பெண்கள் வன் கொடுமை சட்டத்தில் எச்.ராஜா மீது கிள்ளை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல்விடுதலை சிறுத்தை கள் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு தலைமையில் திமுக, திராவிடர் கழகத்தினர் கடந்த மார்ச் 7-ம் தேதி அளித்த புகார் மனுவின் பேரில், நேற்று மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தினர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திலும் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரில் அண்மையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அறநிலையத் துறையினரை அவதூறாக பேசியதாக, திருவா ரூர் அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x