Published : 23 Sep 2018 10:03 AM
Last Updated : 23 Sep 2018 10:03 AM

விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொகுதிகள் இணைக்கப்படவில்லை: தொடரும் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுமா?

விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டம் அறிவிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும், அதில் இடம்பெற்றுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகள், சென்னை மாவட்டத்துடன் இன்னும் இணைக்கப்படவில்லை. அதனால் நிர்வாக சிக்கல்கள் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் எல்லை 426 சதுர கிலோமீட்டராக விரிவடைந்தது. அதே அளவுக்கு சென்னை மாவட்ட நிர்வாக எல்லை விரிவாக்கப்படவில்லை.

இதனால் சென்னை மாநகராட்சி, பல்வேறு திட்டப்பணிகளை 3 மாவட்ட ஆட்சியர்களையும் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டியிருந்தது. இதனால் 3 மாவட்டங்களிடையே நிர்வாக சிக்கல் நிலவியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக, விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தொடங்கிவைத்தார். அது தொடர்பான அரசாணை, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் விரிவாக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழும் சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய தொகுதிகள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழும் செயல்படுகின்றன. இம்மாதம் சென்னை மாநகராட்சி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் கூட, பழைய சென்னையில் இடம்பெற்றுள்ள 16 தொகுதிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 6 தொகுதிகள் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

விரிவாக்கப்பட்ட பகுதி களில் உள்ள தொகுதிகளுக் கான அதிகாரிகளாக உள்ள மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைமையகங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். இதற் கிடையில் மாநகராட்சியின் அன்றாட பணிகளையும் கண் காணிக்க வேண்டி இருக்கும். இதுபோன்ற நிர்வாக சிக்கல் களை தீர்க்கவே, விரிவாக்கப் பட்ட சென்னை மாவட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட 6 தொகுதிக ளும், சென்னை மாவட்டத்தில் இதுவரை இணைக்கப்பட வில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பாக இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி யிடம் கேட்டபோது, “தற்போது விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்குள் வரும் தொகுதிகள், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் வரும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். அதற் கான கருத்துருவை மாநில தலைமை தேர்தல் அலுவலர், இந்திய தேர்தல் ஆணையத் துக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

இது குறித்து மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதசாகுவிடம் கேட்ட போது, ‘‘சென்னை மாவட்டத் துக்குள் வரும் தொகுதிகளை, சென்னை மாவட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக் கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x