Published : 06 Sep 2018 08:13 AM
Last Updated : 06 Sep 2018 08:13 AM
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு கர்நாடகத்தின் உட் பகுதி மற்றும் கன்னியாகுமரி இடையே, தமிழகத்தின் உட் பகுதி வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த சில தினங் களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங் களில் லேசான மழை பெய்யக் கூடும். புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ, வேலூர், வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT