Published : 05 Sep 2018 08:35 AM
Last Updated : 05 Sep 2018 08:35 AM
முக்கொம்பு கொள்ளிடம் மேலணை யில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ராணுவப் பொறி யாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீர மைப்புப் பணிகள் நடைபெறுவதை அண்மையில் பார்வையிட்ட அமைச்சர் என்.நடராஜன், தேவைப் பட்டால் ராணுவ உதவி கோரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து மேஜர் அரவிந்த் தலைமையிலான ராணுவ கட்டிடப் பொறியாளர்கள் 3 பேர் முக்கொம்பு மேலணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர ஆய்வுக்குப் பிறகு அவர்கள் பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் என்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
கொள்ளிடம் மேலணையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 40 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்ததாகக் கூறினார். ஆனால், 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
மாயனூரில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் தற்போது குறைந்துள்ளது. நேற்றைக் காட்டிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாளில் பணிகள் முழுமையாக முடிவடையும். பணிகள் முடிந்தவு டன் கடைமடைப் பகுதிகள், கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
பணியில் திருப்தி
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டதன் பேரில், ராணுவத்தில் இருந்து பொறியாளர்கள் வந்து சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தனர். மணல் மூட்டைகள், பாறாங்கற் களைக் கொண்டு தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்துவதுதான் சரியானது என்று கூறிய ராணுவப் பொறியாளர்கள் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக திருப்தி தெரிவித்தனர்" என்றார். பேட்டியின்போது அமைச்சர் எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT