Published : 13 Sep 2018 08:25 AM
Last Updated : 13 Sep 2018 08:25 AM

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீஸார் உத்தரவு

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒரு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோவை வரும் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வருபவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் பலமுறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளதால் மாநில அரசு மற்றும் போலீஸாருக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் எர்ணாகுளம் மண் டல போலீஸ் ஐ.ஜி. விஜய் சகாரே தலைமையில் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு ஐ.ஐி. விஜய் சகாரே கூறும்போது, “வரும் 19-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு முன் விசாரணைக்கு ஆஜராகும்படி பிஷப் பிராங்கோவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

பிரமாணப் பத்திரம்

இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வியாழக் கிழமை பிரமாணப் பத்திரம் தாக் கல் செய்ய கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரமாணப் பத்திரம் இந்தக் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டதாக டிஎஸ்பி ஹரிசங்கர் கூறினார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி வழங்கக் கோரி பல்வேறு கத்தோலிக்க சீர்திருத்த அமைப்புகள் சார்பில் கொச்சியில் நேற்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

எம்எல்ஏ வருத்தம்

நடந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கன்னி யாஸ்திரி அப்போதே புகார் அளிக் காதது ஏன் என்று கேரள சுயேச்சை எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் கடந்த 8-ம் தேதி கேள்வி எழுப்பினார். அப்போது கன்னியாஸ்திரிக்கு எதிராக தகாத வார்த்தைகளை அவர் கூறியதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந் நிலையில் இதற்கு பி.சி. ஜார்ஜ் நேற்று வருத்தம் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x