Published : 03 Sep 2018 08:10 AM
Last Updated : 03 Sep 2018 08:10 AM

டிராபிக் ராமசாமியின் உதவியாளர் மரணம்

டிராபிக் ராமசாமியின் உதவியா ளர் பாரதி என்கிற பாத்திமா (45) திருச்சி தனியார் மருத்துவ மனையில் நேற்று காலமானார்.

கும்பகோணம் அருகே உமை யாள்புரம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் பாரதி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கண வனை பிரிந்த பாரதி, வெளி நாட்டுக்கு சென்றார். அங்கு தன்னுடைய பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்.

பின்னர், கும்பகோணம் திரும் பிய அவர், சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் உதவியாளராகி, அவரது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி யில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் பெற்றார்.

அதன்பிறகு, டிராபிக் ராமசாமி யுடன் இணைந்து தமிழகம் முழு வதும் சாலைகளில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்றுவது, மணல் கொள்ளைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x