Published : 20 Sep 2018 10:06 AM
Last Updated : 20 Sep 2018 10:06 AM

தேமுதிக பிரமுகரின் கடையில் ரூ.6 லட்சம் செல்போன்கள் திருட்டு: குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அருள் பாக்யராஜ். தேமுதிகவில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள் ளார். பெரம்பூர் அருகே மூலக்கடை காந்தி நகர் காமராஜ் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். நேற்று காலை கடையைத் திறக்க ஊழியர்கள் வந்தபோது ஷட்டர் களின் பூட்டு உடைந்து கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 6 லட்சம் மதிப் புள்ள செல்போன்கள், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் திருடப் பட்டு இருந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத் தில் புகார் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆணையர் அழகேசன், ஆய்வாளர் பத்மாவதி, போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x