Published : 12 Sep 2018 02:25 PM
Last Updated : 12 Sep 2018 02:25 PM

ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்: துரைமுருகன் பேச்சு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, நெல்லை மாவட்டம் தென்காசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன், “இன்றைக்கு அகில இந்திய தலைவர்கள் எல்லாம், மு.க.ஸ்டாலினை தனித்தன்மையுடைய தலைவர் என பாராட்டுகின்றனர்.

ஸ்டாலின் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும் என்றுதான் கேட்கின்றனர். அடுத்தமுறை யாருடைய ஆட்சி அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்நாட்டின் அடுத்த பிரதமர்” என துரைமுருகன் பேசினார்.

மேலும், கடந்த 55 ஆண்டுகளில் கருணாநிதியை விட்டு நிழல் கூட பிரிந்திருக்கலாம் எனவும் தான் ஒருபோதும் பிரிந்ததில்லை எனவும் துரைமுருகன் உருக்கத்துடன் பேசினார். குடும்பத்தை விட கருணாநிதியின் அருகிலிருந்த நாட்கள்தான் அதிகம் எனவும் துரைமுருகன் பேசினார். தமிழகத்தின் நிர்வாகம் தற்போது ஸ்தம்பித்து விட்டதாகவும் துரைமுருகன் சாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x