Published : 12 Sep 2018 07:58 AM
Last Updated : 12 Sep 2018 07:58 AM

7 ஆண்டுகளாக முடங்கி கிடந்த மதுரை யாதவர் கல்லூரி நிர்வாகத்தை அரசு ஏற்றது

மதுரை யாதவா் கல்லூரி நிர்வாகத்தை அரசு ஏற்றதைத் தொடர்ந்து, தனி அலுவலராக மதுரை ஆட்சியர் எஸ்.நடராஜன் பொறுப்பேற்றார்.

மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா் இருபாலர் கல்லூரி 1969-ல் தொடங்கப்பட்டது. கல் லூரியை யாதவர் சங்கமே நிர் வகித்து வந்தது. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத் தின் புதிய விதிகளின்படி, யாதவர் கல்லூரி நிர்வாகத்தை இணைக்கத் தவறியதால் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. நிர்வாகிகள் தேர்வில் ஏற்பட்ட பிரச்சினையால் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், 2012 பிப்ரவரி முதல், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் கல்லூரி நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. கல்லூரியை மீட்கக் கோரி யாதவர் சமூகத்தினர் உண்ணா விரதம் உள்ளிட்ட போராட்டங் களை மேற்கொண்டனர்.

கல்லூரியிடம் ரூ.25 கோடி வரை நிதியிருந்தும் செலவிட முடியாத நிலையில் கல்லூரியின் தரம் நாளுக்கு நாள் கீழிறங்கியது.நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தும் அலுவலராக பதிவுத் துறை அதிகாரி வி.வாசுகி கடந்த ஜூலை 27-ல் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.10), மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் கல்லூரியின் தனி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் சட்டம் 1976 பிரிவு 14ஏ-யின் கீழ் தாளாளருக்கு உரிய அனைத்து அதிகாரங்களுடன் கல்லூரியை நிர்வகிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x