Published : 06 Jun 2019 02:42 PM
Last Updated : 06 Jun 2019 02:42 PM

நீட் வேண்டாம் என்ற கொள்கையிலிருந்து நாங்கள் மாறுபடவே இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் இருந்து நாங்கள் மாறுபடவே இல்லை என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) மதியம் 2 மணியளவில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

நீட் தேர்வு தோல்வியால் இதுவரை தமிழகத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி மாநில அரசை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "நீட் தேர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, "நீட் வேண்டாம் என்ற கொள்கையிலிருந்து நாங்கள் மாறுபடவே இல்லை.

ஆனால், அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x