Published : 24 Jun 2019 11:17 AM
Last Updated : 24 Jun 2019 11:17 AM
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால், தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வராத நிலையில் இப்போதே கூட்டணி பற்றி பேசுவது அவசியமில்லாதது எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வாரம் தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடந்த போராட்டத்தில் பேசிய திமுகவின் மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, "காங்கிரஸுக்கு, நாம் பல்லக்கு தூக்க வேண்டிய தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிடவேண்டும்" என்று பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய அரசை அணுகி நிதியை பெற்றாவது, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
கவனிக்கத்தக்க அமைச்சரின் விமர்சனம்..
திமுகவின் வெற்றி குறித்து சிவகாசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் என்ற பல்லக்கைத் தூக்கியதால்தான் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. நேரு குடும்பம், ராஜீவ் குடும்பம், அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் திமுக அணியை மக்கள் ஆதரித்தினர் என்று விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT