Published : 05 Jun 2019 08:49 PM
Last Updated : 05 Jun 2019 08:49 PM

திருப்பூர்: நீட் தேர்வில்  மதிப்பெண் குறைவால் ரிதுஶ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற பெண் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் - ராஜலட்சுமி தம்பதியரின் மகள் ரிதுஶ்ர. இவர் ஜெய்வாபாய்  அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பில் 461 மதிப்பெண்களும் 12ம் வகுப்பில் 490 மதிப்பெண்களும் எடுத்தவர்.

 

இந்ந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியுற்றதால் விரக்தியடைந்த ரிதுஶ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x