Published : 26 Jun 2019 08:41 AM
Last Updated : 26 Jun 2019 08:41 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணம் தொடர்பாக விசா ரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பணிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயல லிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப் பினர் சந்தேகம் எழுப்பினர். இதை யடுத்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். 3 மாதங்களில் இந்த விசாரணையை முடிக்க ஆணையத்திடம் கேட்டுக்கொள் ளப்பட்டது.

தொடர்ந்து பலரிடம் விசா ரணை நடத்தவேண்டி இருந் ததால், ஆணையத்துக்கு 6 மாதம் கால நீட்டிப்பு வழங்கி 2017-ம் ஆணடு டிசம்பர் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதியு டன் ஆணையத்தின் பணிக்காலம் முடிவடைய இருந்தது.

ஆனால், விசாரணை தொடர்ந்து நடந்து வந்ததால், ஜூன் 20-ம் தேதியே விசாரணை ஆணையத்தின் பணிக்காலத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் இந்த காலக்கெடு முடிந்தது. தொடர்ந்து 3-வது முறையாக 4 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியுடன் கால நீட்டிப்பு முடிந்த நிலையில், 4-வது முறையாக மீண்டும் 4 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த 4 மாத காலநீட்டிப்பு, ஜூன் 24-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 5 வது முறையாக மேலும், 4 மாதம் விசாரணை ஆணையத்துக்கு கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், உச்ச நீதி மன்றத்தில் அப்போலோ மருத் துவமனை தொடர்ந்த வழக்கில், விசாரணை ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x