Published : 02 Jun 2019 10:55 AM
Last Updated : 02 Jun 2019 10:55 AM

ப.சிதம்பரம் இன்று இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை; இந்தி திணிப்பு பொய் பிரச்சாரம் வேண்டாம்: தமிழிசை

இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இன்று இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை என்று பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 

 இந்தியாவில் புதிய கல்விக்கொள்கையை அதற்கான அமைக்கப்பட்ட திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள்  குழு மத்திய அரசுக்கு  ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது.

 

அது ஓர் பரிந்துரைத்தான் ... அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாளும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, முடிவும் செய்யப்படவில்லை ஆனால் அதற்கு முன்பே  ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல ஸ்டாலின்,வைகோ,முத்தரசன்,சிதம்பரம் போன்றவர்கள் கூட கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தியிருக்கிறார்கள்... எங்கேயாவது போராட்டம் நடத்த வழி  கிடைக்காதா?  என தேடித்திரிபவர்களுக்கு இல்லாத இந்தி திணிப்பை காரணமாகக் கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என ஆயத்தமாகி வருகிறார்கள்.

 

மத்தியில் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.இல்லாத இந்தி திணிப்பை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர் தெளிவாகச் சொல்லிவிட்டார் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது  என்று. அதே போல் இன்றைய மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ரமேஷ் போக்கிரியால் நிஷாங்  அவர்களும் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது

 

முன்மொழிக்கொள்கை என்பது பரிந்துரைத்தல்  மட்டுமே ,கொள்கை முடிவல்ல என்பதையும்,தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப்பட்டதை போல தொலைக்காட்சிகள் கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல.இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் அறிக்கை எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம் அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கை முடிவு ? நான் கேட்கிறேன் ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சி  கையெழுத்திட்டார்... ஏன்  ஆராய்ச்சி அனுமதித்து  கையெழுத்திட்டார்...முதலிலேயே முடியாது என்று சொல்லவில்லை?

 

ஆக  இனித்தால் படிக்கலாம் திணித்தல்  இல்லையென்றும் சொல்லியாகிவிட்டது.விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும் சொல்லியாகிவிட்டது. தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம் வெறும் இது  வரைவு அறிக்கைதான் ஆக ஏதாவது காரணம் கிடைக்காதா? போராட்டம்  நடத்த   எனக் காத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏமாந்துதான்  போவார்கள் ...

 

அதைவிட வேடிக்கை காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுகவுடன் சேர்ந்து இந்தியை  எதிர்ப்பதாக சொல்வதுதான் நாடகம். இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இன்று இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x