Published : 22 Jun 2019 08:13 AM
Last Updated : 22 Jun 2019 08:13 AM

சிவகங்கை அருகே 500 ஆண்டுகளாக தாகம் தீர்த்த நாட்டரசன்கோட்டை கோயில் குளம் வறண்டது

சிவகங்கை அருகே 500 ஆண்டு களுக்கும் மேலாக தாகம் தீர்த்த நாட்டரசன்கோட்டை தெப்பக்குளம் வறண்டதால் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கிடைக் காமல் தவிக்கின்றனர்.

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன்பு தெப் பக்குளம் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

நீர்வரத்துப் பாதிக்காமல் இருக்க நீர்பிடிப்புப் பகுதிக்காக 15 ஏக்க ருக்கு மேலான நிலத்தை முன்னோர் தானமாக வழங்கினர். அப் பகுதியில் சீமைக் கருவேலச் செடி கள் முளைத்தால்கூட வெட்டி விடு கின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெய் யும் மழை நீர் நேரடியாக தெப்பக் குளத்தை அடைகிறது. நீர்வரத்துப் பாதிக்கப்படாததால் குளம் வேக மாக நிரம்பி விடுகிறது. இதனால் தெப்பக்குளம் எளிதில் வற்றாமல் இருந்தது. கிராம மக்கள் தெப்பக் குள நீரையே சமையலுக்கும் குடிப் பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

நாட்டரசன்கோட்டையைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தக் குடிநீரைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலை யில், கடும் வறட்சியால் இந்தத் தெப்பக்குளம் தற்போது வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து நாட்டரசன் கோட்டை மக்கள் கூறும்போது, “செம்மண் பூமியாக இருப்பதால் ஊருணி தண்ணீர் சுவையாக இருக் கும். இதனால் சமையலுக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வந் தோம். கடந்த காலங்களில் கோடை யிலும் வற்றாமல் இருந்து தண்ணீர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய் தது. ஆனால் இந்த ஆண்டு எப் போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சியால் வறண்டது. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x