Published : 07 Sep 2014 12:45 PM
Last Updated : 07 Sep 2014 12:45 PM

வடசென்னை ரவுடி ஆறு விரல் பாபு கைது

கடந்த 10 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த ஆயுள் தண்டனை கைதி வடசென்னை பிரபல ரவுடி ‘ஆறு விரல்’ பாபுவை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்படி, தலை மறைவு குற்றவாளிகளை பிடிக் கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல ரவுடிகள் கண் காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்னவேல் பாண்டியன் தலை மையில் தனிப்படையினர், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆறு விரல் பாபு (53) என்பவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஏழு கிணறு பகுதியில் பதுங்கியிருந்த ஆறு விரல் பாபுவை சுற்றி வளைத்து தனிப்படைப் போலீஸார் பிடித்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு இறந்து போன பிரபல வடசென்னை தாதா வெள்ளை ரவியின் அண்ணன் தான் ஆறு விரல் பாபு.

எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் கடந்த 1989-ம் ஆண்டு பாலு என்பவரை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாபு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக 2001-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி வேலூர் மத்திய சிறையிலிருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பித்து விட்டார்.

அதன்பின், அவரை 2003-ம் ஆண்டு போலீஸார் பொன் னேரியில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

ஆனால், வேலூர் சிறையில் அவரது தம்பி வெள்ளை ரவியும் இருந்ததால், சில காலத்துக்குப் பிறகு சேலம் சிறைக்கு பாபுவை மாற்றினர். கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பரோல் விடுப்பில் வந்த பாபு, மீண்டும் சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாகி விட்டார்.

இதுதொடர்பாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரின் புகாரின் பேரில் எம்-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவான பாபுவை தேடி வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாபுவை மத்திய குற்றப் பிரிவு ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் சனிக்கிழமை ஏழு கிணறு பகுதியில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x