Published : 04 Mar 2018 10:27 AM
Last Updated : 04 Mar 2018 10:27 AM

அரசு கேபிளில் உள்ளூர் சேனல்களை ஒளிபரப்ப ஏற்பாடு: நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வருவாயை உயர்த்தும் விதமாக, அதன் கேபிள் டிவி இணைப்பில் உள்ளூர் சேனல்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் சேவையை வழங்கி வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 19 லட்சம் டிஜிட்டல் இணைப்புகளை வழங்கியுள்ளது. அரசு கேபிள் டிவி இணைப்பில் 100-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பார்க்க முடியும். அண்மையில் 13 பிறமொழி சேனல்களைப் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அரசு கேபிள் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கும் விதமாக, அரசு கேபிள் இணைப்பு வழியாக உள்ளூர் சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் 10 உள்ளூர் சேனல்களையும், சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில், 10 உள்ளூர் சேனல்களையும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் உள்ளூர் சேனல்கள், அரசு கேபிள் இணைப்பில் சென்னையில் ஒளிபரப்பு செய்ய ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும், சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் ஒளிபரப்ப ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும் அரசு கேபிள் டிவிக்கு செலுத்த வேண்டும். இதற்கான ஒப்பந்தம் ஓராண்டுக்கு வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x