Published : 25 Mar 2018 11:05 AM
Last Updated : 25 Mar 2018 11:05 AM
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என, மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதற்கு, திரைத்துறை தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்பது தெரியவில்லையா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்’’ எனக்கூறியுள்ளார்.
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘‘தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல். உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல். உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) March 24, 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT