Published : 29 Mar 2018 01:46 PM
Last Updated : 29 Mar 2018 01:46 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வு - ரஜினி கருத்து

 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடையும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் அமைப்பைக் குறிக்கிறதா? என உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனைக் கேட்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான மனு ஓரிரு நாளில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். காவிரி விவகாரத்தில் நீதி கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன்”

என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x