Published : 07 Mar 2018 08:51 AM
Last Updated : 07 Mar 2018 08:51 AM
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் எதுவும் இல்லை என நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேற்று சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
சென்னையில் நடந்த எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. தலைவர்களுக்கான வெற்றிடமும் உள்ளது என கூறியிருக்கிறார். தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. அதை தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும். அதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.
புதிய கூட்டணி அமைக்கும் திட்டத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் என்னுடன் பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக உளளது. இந்தச் சூழ்நிலையில் மம்தா ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. திமுக உயர்நிலைக் குழுவில் விவாதித்து பதில் சொல்வதாக தெரிவித்து இருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT