Published : 28 Mar 2018 08:17 AM
Last Updated : 28 Mar 2018 08:17 AM
‘நியூட்ரினோ திட்டம் நல்ல திட்டம், இதை அப்துல் கலாமே வரவேற்றுள்ளார்’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி விவகாரத்தில் அமைக்கப்படும் குழுவின் பெயர் என்ன என்பது முக்கியமல்ல, காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நியூட்ரினோ திட்டம் நல்ல திட்டம், இதை அப்துல் கலாமே வரவேற்றுள்ளார். தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் அனைத்து திட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT