Published : 05 Mar 2018 10:11 AM
Last Updated : 05 Mar 2018 10:11 AM

விமானத்தில் கடத்திய 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்கள், அவர்களின் உடைமைகளை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஹைதர்அலி, தான் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட அனுமதிக்காமல், திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைக்கண்ட சுங்கத் துறையினர் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர்.

அவர் கொண்டுவந்த பையில், லேப்டாப் சார்ஜருக்குள் ரூ.40.85 லட்சம் மதிப்பிலான 1,331 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து, கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹைதர் அலியை கைது செய்து தங்கக்கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x