Published : 09 Mar 2018 10:17 AM
Last Updated : 09 Mar 2018 10:17 AM

காவல் துறை பணியில் பெண்கள் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம்

காவல்துறை பணியில் பெண்கள் இரவு, பகலாக உழைத்து வரு கிறார்கள் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா கொண்டாட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள புதிய காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட பெண் போலீஸார் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டார். அவர் பெண் போலீஸாருக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் செல்ஃபி புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.

பின்னர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது: எந்த துறையையும்விட, எந்த பணியையும்விட காவல்துறை பணியை இரவு பகலாகச் செய்து வருகிறீர்கள்.

உழைப்பு, தியாகம்

கடுமையாக உழைத்து வருகிறீர்கள். வருடம் முழுவதும் இதை செய்து வரு கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

யாருக்கும் குறைவில்லாமல் உழைப்பைக் கொடுத்து வருகிறீர்கள். ஆணுக்கு நிகராக உழைக் கிறீர்கள். குடும்பத்தையும் சேர்த்து பார்க்கிறீர்கள், மக்கள் பணியையும் செய்கிறீர்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். உங்களோடு மகளிர் தினம் கொண்டாடியதில் மகிழ்ச்சி. உங்களது உழைப்பு மற்றும் தியாகத்துக்கு நன்றி.

பெண் அமைதியாக இருந்தால்தான் நாடு வளரும். குடும்பத்தின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி. அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளோம். நீங்கள் தொடர்ந்து காவல்துறைச் சேவையை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னேற்ற ஊக்குவிப்பு

முன்னதாக பல வண்ண கலர் பொடியை கையில் பூசிக் கொண்டு பெண் போலீஸார், “முன்னேற்றத்துக்காக ஊக்குவிப்போம்” என்ற தொனியில் கையில் பூசிய வண்ண சாயங்களை, வெள்ளை நிற கண்ணாடி யில் பதிய வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x