Last Updated : 08 Mar, 2018 07:50 PM

 

Published : 08 Mar 2018 07:50 PM
Last Updated : 08 Mar 2018 07:50 PM

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – கமல்ஹாசன் அறிவிப்பு

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்த கமல்ஹாசன், பின்னர் 10 லட்ச ரூபாயாக தொகையை உயர்த்தினார். தமிழக அரசு சார்பில் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x