Published : 10 Mar 2018 09:10 PM
Last Updated : 10 Mar 2018 09:10 PM
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்'' என்று சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT